சனி, 20 ஜூலை, 2013

டவுட்டு.:
எல்லா அரசியல் கட்சிகளுமே மாநாடு அல்லதுபேரணி  நடத்தும் பொழுது ஊர்களின் பெயரை குறிப்பிட்டு ”சென்னை குலுங்கட்டும், திருச்சி அதிரட்டும்” இப்படி எல்லாம் போஸ்டர்களிலும் பேனர்களிலும் எழுதி வைக்கறாங்களே...
இவங்க ஓரே இடத்தில் கூடும் பொழுது நல்லதே நடக்காதா... இல்லை நடக்க கூடாதுன்னு விரும்புறாங்களான்னே தெரியலையே...
காலப்பெரு வெள்ளத்தின் சுழலில் எஞ்சி நிற்பது, வாழ்க்கையில் ஒருவனின் நல்ல, அல்லது கெட்ட குணங்களை பற்றிய விமர்சனங்களே...
காலம் எனும் டவுன் பஸ்ஸில் நாமெல்லோரும் பயணிகளே...
ஏதோ ஒரு இடத்தில் ஏறுகிறோம். அவரவரின் நிறுத்தம் வந்ததும் இறங்குவதை போல வாழ்க்கையும் நிறைவு பெறுகிறது...

ஞாயிறு, 10 ஜூன், 2012


அழகானது பூமி, அமைதியானது பூமி, ஆனால் பூமிக்கும் கூட கோபம் வரும் என்பதை மறந்து விடுகிறோம்.

ஞாயிறு, 20 மே, 2012

அன்பு
அன்பில்லாத இடம் சூன்யமான காரிருளை போன்றது.
நிர்மலமான மனம் வேண்டுமா, இரத்த அழுத்தம் வராத வாழ்க்கை வேண்டுமா?, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த பழகுங்கள். உங்களின் வாழ்க்கையும் அழகாகும்.