சனி, 20 ஜூலை, 2013

டவுட்டு.:
எல்லா அரசியல் கட்சிகளுமே மாநாடு அல்லதுபேரணி  நடத்தும் பொழுது ஊர்களின் பெயரை குறிப்பிட்டு ”சென்னை குலுங்கட்டும், திருச்சி அதிரட்டும்” இப்படி எல்லாம் போஸ்டர்களிலும் பேனர்களிலும் எழுதி வைக்கறாங்களே...
இவங்க ஓரே இடத்தில் கூடும் பொழுது நல்லதே நடக்காதா... இல்லை நடக்க கூடாதுன்னு விரும்புறாங்களான்னே தெரியலையே...
காலப்பெரு வெள்ளத்தின் சுழலில் எஞ்சி நிற்பது, வாழ்க்கையில் ஒருவனின் நல்ல, அல்லது கெட்ட குணங்களை பற்றிய விமர்சனங்களே...
காலம் எனும் டவுன் பஸ்ஸில் நாமெல்லோரும் பயணிகளே...
ஏதோ ஒரு இடத்தில் ஏறுகிறோம். அவரவரின் நிறுத்தம் வந்ததும் இறங்குவதை போல வாழ்க்கையும் நிறைவு பெறுகிறது...